Sunday, July 31, 2011

தேவராட்டம்

தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் வடிவம் தேவராட்டம். குறிப்பாக தமிழ்நாட்டில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினரில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்ற சடங்கு.[1] எனலாம். இந்த ஆட்டத்தை தலைப்பில் தலைப்பா கட்டி, இடுப்பில் துண்டு கட்டி ஆடுவர். உருமி மேளம், பறை மேளம் ஆகியவை தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைக் கருவிகளாக இருக்கின்றன. கம்பளத்து நாயக்கர் எனும் சமூகத்தினரின் கோவில் விழாக்களிலும், வீட்டு விழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இதை ஒரு சடங்காகவே வைத்திருக்கின்றனர்.
கம்பளத்து நாயக்கர்களின் ஒரு பிரிவினரான சில்லவார்கள் என்பவர்கள் இவ்வாட்டத்தை ஆடுகிறார்கள். ஜக்கம்மா கோயிலில் சித்திரை மாதம் நிகழும் கொடை விழாவின்போதும் அவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளான திருமணம், பூப்புச் சடங்கு ஆகியவைகளிலும் முக்கிய நிகழ்வாக தேவராட்டம் நிகழ்கிறது. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே இவ்வாட்டத்தில் பங்குபெறுகின்றனர். இதன் அடவுகள் உறுமி இசைக்கேற்ப ஆடப்படுகிறது. தேவராட்டத்தில் மொத்தம் 34 வகையான அடவு முறைகள் உண்டு. ஆட்டம் மெதுவாகத்துவங்கி வேக கதியில் முடியும்.

No comments:

Post a Comment